மின்சாரக் கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நேற்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டுவர முடியாத நிலை உள்ளது.
தற்போது கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பேரிடம் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்து உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஏற்கனவே, அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சார கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு முழுமையாக ரத்து செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…