மின்சாரக் கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நேற்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டுவர முடியாத நிலை உள்ளது.
தற்போது கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பேரிடம் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்து உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஏற்கனவே, அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சார கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு முழுமையாக ரத்து செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…