1000 கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் பிரதமரே – கமல்ஹாசன்

Half India is starving, who is building a parliament worth Rs 1,000 crore? Kamal Haasan, chairman of the Mnm, has questioned that.

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டிடம் போதுமான வசதி மற்றும் வரும் காலங்களில் இடங்கள் அதிகரிப்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி இந்த புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய கட்டிடத்திற்க்கான ஒப்பந்தம் டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. கலைநயம், எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைகிறது. ஒரே நேரத்தில் ஆயிரத்து 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown node