கஜா புயல் பாதிப்பு …!மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…!தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை

Published by
Venu

கஜா புயல் தொடர்பாக நவம்பர்  26ஆம் தேதி  விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் பல தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர்.

மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை,புயல் பாதித்த  மாவட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தர வேண்டும்.

மின் இணைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் என்ன உதவிகள் கேட்டுள்ளன?  என்று கேள்வி எழுப்பியுள்ளது.போர்க்கால அடிப்படையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வசதிகள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு  பிறப்பித்துள்ளது.அதேபோல் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு  பதிலளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த  வழக்கு விசாரனைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை,புயல் நிவாரணப்பணிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு பிறப்பித்துள்ளது.கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து பெற்ற உதவிகள் என்ன? என்பதையும் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.நவம்பர்  26ஆம் தேதி  விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago