சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனுாரைச் சேர்ந்தவர் திருவராஜ், இவரது வயது 46, இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டில் இருந்து,இதுவரை ஏழு முறை, குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த முறை நடந்த, கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வு எழுதிய இவர், மாநில அளவில் முதலிடம் பிடித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்களில் அதிகமானோர் இந்த பகுதியிலிருந்து தேர்வானது பெரும் சந்தேகத்திற்க்கு உள்ளாக்கியது.
இதையடுத்து, அந்த தேர்வு மையங்களில் தேர்ச்சி பெற்ற, 35 பேரையும், ஜனவரி 13ம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதிய திருவராஜ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருவராஜ் கூறுகையில், ”விசாரணையில் நான் குற்றமற்றவன் என நிரூபிக்க தயார்.நான் கடும் உழைப்பின் மூலம் இந்த முதலிடத்தை பெற்றேன்.வேண்டுமானால் நான் மீண்டும் தேர்வு எழுதவும் தயாராக உள்ளேன். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றால் வெற்றி பெறக் கூடாதா,” என்றார். இந்த விவகாரம் தமிழகத்தையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது நம்பகத்தன்மையை சந்தேகக்கண்ணுடன் பார்க்க வைத்துள்ளது.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…