கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாகிய டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு இன்று தொடங்குகிறது.
பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2020ம் ஆண்டுக்கான துறை தேர்வுகள் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நேர்முக தேர்வு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஆகிய நிலையில், தற்போது இந்த தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி நாகர்கோவில் மற்றும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கு நாகர்கோவில் மையத்திலும், 9 ஆம் தேதி மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மதுரை மையத்திலும் நடைபெறுகிறது.
12, 13 ஆம் தேதிகளில் கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கோவை மையத்திலும், 15 ஆம் தேதி கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மையத்திலும், 16 ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, கடலூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலூர் மையத்திலும், 17 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் மையத்திலும், 26,27 ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு சென்னை மையத்திலும் நடைபெறுகிறது.
குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…
சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…