மிக்ஜாம்  புயல் எச்சரிக்கை.! டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு.!

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என  3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்…

நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி நேர்முகத்தேர்வு தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு முன்னதாக முடிவடைந்து கடந்த நவம்பர் மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போல் நாளை டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில் நேர்முக தேர்வானது சென்னை பாரிமுனை டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில்  நடைபெற இருந்தது.

இந்த நேர்முக தேர்வு தேதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாளை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முக தேர்வு டிசம்பர் 6ஆம் தேதிக்கும், டிசம்பர் 6ஆம் தேதி புதன் கிழமை நடைபெற இருந்த தேர்தல் வியாழன் அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

3 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

22 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago