வதந்திகளை நம்ப வேண்டாம்… திட்டமிட்டபடி தேர்வு நடக்கும்…. தேர்வுக்கு தயாராக டி.என்.பி.எஸ்.சி….

Published by
Kaliraj

இந்த 2020அம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சில தினங்களுக்கு முன் தமிழக அரசு  ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 58லிருந்து  59 ஆக அதிகரிக்கப்பட்டது.  இந்த உத்தரவால், புதிய வேலைவாய்ப்புகள் குறையும் என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அரசு பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனவும்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது எனவும் வதந்திகள் பரவின. இந்நிலையில், இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், நடப்பாண்டில், அரசு பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, போட்டி தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட, 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி, ‘குரூப் – 1 முதல், குரூப் – 4’ வரை அனைத்து தேர்வுகளும், உரிய காலத்தில் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டை பொறுத்தவரை, அரசு துறைகளின் தேவைக்கு ஏற்ப, காலியிடங்களை நிரப்ப, தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  தேர்வர்கள், எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Published by
Kaliraj

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

18 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago