டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை.

அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்த முடியாத, சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது. காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வயது வரம்பை உயர்த்துவது என்பது சிகிச்சையே அளிக்காமல் நோயாளியை மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு சமம்.

திமுகவின் கணக்குப்படி பார்த்தால், மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை ஐந்தாண்டுகளில் நிரப்ப வேண்டுமானால், ஓராண்டிற்கு 70,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்களைக் கூட நிரப்பியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2023-ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், வெறும் 1,754 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் – 4 பதவிகளுக்கான தேர்வின் அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப் – 4 தேர்வு எழுதி கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகியும் அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.இந்த நிலையில் அடுத்தத் தேர்வு 2024-ஆம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதில் தான் தாமதம் என்றால், முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் என்ற நிலை நிலவகிறது.

இது ‘திராவிட மாடல்’ அரசு அல்ல, ‘திராபை மாடல்’ அரசு, அதாவது எதற்கும் உபயோகமில்லாத பயனற்ற அரசு. எனவே, 2023 ஆம் ஆண்டிற்கான அரசுப் பணித் தேர்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்திக் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago