#TNBudget2022 : வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல் – ஈபிஎஸ்

Published by
லீனா

2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில்  நேற்று தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றது. இந்த நிலையில், பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈபிஎஸ் அறிக்கை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக பட்ஜெட்டை விமர்சித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • திமுக அரசு தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்துவேட்டு ஆகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு 55,781.17 கோடி.
  • 2021-22 ஆம் ஆண்டுக்கான கடன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 175 கோடி வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23 இந்த ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 950 கோடிகடன் வாங்குவதாக அறிவித்துள்ளீர்கள். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைவிட்டு அகலும் போது சுமார் ஒரு லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றீர்கள்.
  • 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியை விட்டு செல்லும்போது சுமார் 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. அதாவது சுமார் 3.85 லட்சம் கோடிகடன் வாங்கினோம் அவை அனைத்தும் மூலதன செலவுகளுக்காக வாங்கப்பட்டது.
  • ஆனால் நீங்கள் சென்ற ஆண்டு (2021-22) சுமார் 1.08 லட்சம் கோடி, இந்த ஆண்டு (2022-23) 1.20 லட்சம் கோடி என்று இரண்டு ஆண்டுகளில் சுமார் 2.25 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இது மூலதன செலவுகளுக்காக அல்லது வேறு செலவுகள் என்று குறிப்பிடவில்லை. குறித்து மூச்சு காட்டவில்லை.
  • கல்வி கடன் தள்ளுபடி பற்றி குறிப்பிடவில்லை. மகளிருக்கான உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்குவது, பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றி இந்த அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
  • விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உர விலை ஏற்றம் சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் குறித்தோ அதை குறைப்பது குறித்து மூச்சு இல்லை. வெள்ள நிவாரணம் இதுவரை விவசாயிகளுக்கு முழுசாக வழங்கப்படவில்லை. பொங்கல் தொகுப்புகள் வழங்கியதில் ஊழல்
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஆறுமாத கால அகவிலைப்படி
    நிலுவை போன்றவை வழங்கப்படவில்லை.
  • சுமார் 10 மாத கால திமுக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி வரை கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த பட்ஜெட் உரை மூலம் தெரிகிறது.
  • தமிழக அரசின் கடன் சுமையைக் குறைக்கவும் வருவாயை பெருக்கவும் ஆலோசனை கூற அமைக்கப்பட்ட ரகுராம் ராஜன் குழு என்னென்ன திட்டங்களை அரசிடம் முன் வைத்துள்ளது என்பது பற்றி எந்தக் குறிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
  • மொத்தத்தில் இந்த விடியா அரசின் நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்களால் அமைக்கப்பட்ட வாய்ப்பந்தல்.
  • இதை வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

18 minutes ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

51 minutes ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

2 hours ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

3 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

4 hours ago

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

16 hours ago