#TNBudget2022:இரண்டாவது முறையாக…தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

Published by
Edison

2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில்  நேற்று தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.இதனிடையே,பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பின் இன்று காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு  கூட்டம் நடைபெற்றது.

24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்:

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு :”தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 19 ஆம் தேதி வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். வரும் திங்கள்செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் 24 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதில் வரை இடம்பெறும் என தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்:

இந்நிலையில்,2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் துறைக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண்துறைக்கென முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து,2022-23- ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகளிடம்  கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்த பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதில் வேளாண் துறைக்குரிய பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிலுரை:

இதனைத் தொடர்ந்து,21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும்.மார்ச் 24 ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

6 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

7 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

7 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

8 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

9 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

10 hours ago