உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் 5 ஆயிரத்து 700-ஐ தாண்டிவிட்டது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் ஊரடங்கு காவல்துறையினரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கின் போது வெளியில் வருபவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், எமலோகத்தில் இடம் நிரம்பிவிட்டது. இதற்கு மேல் இடமில்லை அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எமன் பேசுவது போல உள்ளது. இந்த விளம்பர விழிப்புணர்வு பலகையை திண்டுக்கல் மாவட்ட தெற்கு பாக காவல் அதிகாரிகள் வைத்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…