நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 1,750 ரவுடிகள்… கண்காணிப்பு பணிகள் தீவிரம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 1,750 பெயர்கள் அடங்கிய ரவுடிகளின் பட்டியலை தமிழக காவல்துறை தயார் செய்துள்ளது.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல சேலம் , நெல்லை பகுதியிலும் அரசியல் பிரமுகர்கள் படுகொலை என்பது கடந்த சில மாதங்களில் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் மாற்றம் செய்ப்பட்டனர்.

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்ஸன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பெயரில் தமிழக காவல்துறைக்கு உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி தென் மாவட்டங்களான திருநெல்வவேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1750 நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 400 நபர்கள் மட்டும் பல்வேறு காரணங்களால் வெளியில் இருக்கின்றனர் என்றும் மீதம் உள்ளவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரவுடிகளின் பட்டியலில் உள்ள 400 நபர்களை கண்காணிக்க தலா ஒரு போலீசார் வீதம் ஷிப்ட் பணிநேரம் விதித்து 24 மணிநேரமும் அவர்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து நெருக்கமான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது என்றும், சிறையில் உள்ள ரவுடிகளின் வழக்கு விவரங்களையும் சேகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago