தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி புதன் கிழமை முதல் சீர்மிகு தமிழக காவல்துறை முழுவதும் நவீனமயமாக மாற்றப்பட உள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே, தமிழக காவல்துறையில், புகார் அளிப்பது, அரசு பணிகளில் சேருவதற்கான நன்னடத்தை சான்று பெறுவது உட்பட பெரும்பாலானவை இனையதளம் மூலம் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், தமிழக டிஜிபி உத்தரவுகள் தொடங்கி அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இ-மெயில்கள் மூலமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையில் தற்போது வரையில் கடிதப்போக்குவரத்து பின்பற்றப்படுகிறது. தபால் மூலமாகவும் சில உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதோடு காவல்நிலையங்களில் தபால் கொண்டு செல்லவும், தபால் டியூட்டி என்று தனியாக காவலர்களுக்கு வழங்கப்படுவது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இனி காவல்துறை முழுவதும், காகிதப்பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஸ்கேனர், இ-மெயில் என்று காவல்துறை முழுவதும் இ-அலுவலங்களாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் அனைத்து ஆவணங்கள் பரிமாற்றமும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…