வாகன விபத்தில் மரணமடைந்த காவலர்  குடும்பத்திற்கு  7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்…

Published by
Kaliraj
வாகன விபத்தில் இறந்த சீர்மிகு காவலர் அமரர்.ராம்கி என்பவரது  குடும்பத்திற்கு  7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்களின் மனித நேய உள்ளம்.
செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் ராம்கி என்பவர். இவர்  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின் இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி இரவு, பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் ராம்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை அறிந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து காவலர்கள் மற்றும் சக காவலர்கள் சமூக வலைதளங்களான டெலகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக இந்த விவரத்தை பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து காவலர்கள் தங்களால் இயன்ற பண உதவியை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். அவ்வாறு செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 7.14 லட்சம் சேர்ந்தது. இதை ராம்கி அவர்களின் குடும்பத்தாரிடம்  மே 20-ஆம் தேதி  அந்தப் பணத்தை ஒப்படைத்தனர். இந்த மனித நேயமிக்க செயல் காவலர்களின் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இவர்களின் இந்த சுய முயற்சி அனைத்து காவலர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 minutes ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

1 hour ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

2 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

3 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

3 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

4 hours ago