முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச்செயலகம் – நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!

Published by
Edison

தலைமைச்செயலகத்தை முற்றிலும் கணினி மயமாக்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல் முறையாக,கடந்த ஆக.13ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும்.காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e – Office ) ஆக மாற்றுவதற்கு ரூ.13 கோடி நிதியை ஒதுக்கி தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு துறைகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வாரியங்கள் / ஏஜென்சிகளில் இ-அலுவலகத்தை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அதன்படி,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, டிஎன்இஜிஏ உள்ளிட்டவை ரூ .21,46,24,904 மதிப்பீட்டில் அனைத்து செயலகத் துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்த அரசுக்கு விரிவான முன்மொழிவை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, TNEGA இன் முன்மொழிவை அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு,நிர்வாக ஒப்புதல் மற்றும்  ரூ. 13,44,27,90 நிதி ஒதுக்கி செயலகத்தின் அனைத்து துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

18 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

32 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

1 hour ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

1 hour ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago