தமிழகத்தின் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை (CMGFP)” தொடங்க முடிவு செய்துள்ளதாக கடந்த 2021-2022 பட்ஜெட் அமர்வின் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் செப்டம்பர் 3, 2021 அன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் 38 மாவட்டங்களில் “முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்” அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இயற்கையை பாதுகாக்க,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எளிய தொழில்நுட்ப முறைகளை வகுக்கும் திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் பசுமைக் கூட்டுறவுத் திட்டம் இளைஞர்கள் மாநில அரசு மற்றும் தமிழக மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாகப் பணியாற்றுவதற்கான ஒரு உற்சாகமான வாய்ப்பாகும் எனவும்,ஒரு பசுமை ஆர்வலரின் முதன்மைப் பணியானது,மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த கொள்கை வகுப்பை அறிவிப்பதாகும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…