விடுதி காப்பாளர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி – அரசாணை வெளியீடு!

Published by
Edison

சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகளுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகளுக்கு 3 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:”2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

“விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/காப்பாளினிகள் தங்கள் விடுதியை சிறந்த முறையில் பராமரிப்பு செய்திடவும், விடுதியை திறம்பட நடத்திடவும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு புத்தாக்க பயிற்சி 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி,பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப் பட்டோர் (மற்றும்) சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றி வரும் 965 காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு சென்னை,கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அண்ணா நிர்வாக பணியான கல்லூரியில் பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

7 minutes ago

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

34 minutes ago

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

11 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

11 hours ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

13 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

14 hours ago