உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளிக்க முதல்வர் தரப்பிலும், இந்திய அளவில் பிரதமர் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்பின் பல்வேறு தரப்பிலிருந்து தமிழக அரசிற்க்கும் இந்திய அரசிற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசிற்க்கு இதுவரை ரூ.36.34 கோடி ரூபாய் நிதியுதவி வந்துள்ளதாக தமிழக அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.36.34 கோடி வந்துள்ளது என்றும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும், கொரோனா நோய் தடுப்பு பணிக்கு மத்திய அரசு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார். மேலும், தற்போது வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.36.34 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதின் முக்கிய விவரங்கள்;
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…