மத்திய அரசால் 12,000 கோடி ரூபாய் இழப்பு.. லிஸ்ட் போட்ட தமிழக நிதியமைச்சர்.!

Published by
மணிகண்டன்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை சார்ப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், கடந்த 2021 – 2022 வரவு செலவு கணக்கீட்டில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு 63,846 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய அரசு திட்டம் போல அறிவித்துவிட்டார். அதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அதற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதன் பிறகு 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரையில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது மத்திய அரசு. ஆனால் அதன் பிறகு, நாக்பூர், கொச்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால், தமிழக அரசு அதன் முழு செலவையும் மாநில சொந்த நிதியில் இருந்து பணிகளை மேற்கொண்டது. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இந்த கூடுதல் நிதிச்சுமையால் இந்த வருடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தி இருக்க முடியும்.

25,000  அரசு பேருந்துகள் வாங்கி இருக்கலாம். இதன் மூலம் பேருந்து எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து இருக்கும். 30 ஆயிரம் கி.மீ தூரம் கிராம சாலைகள் அமைத்து இருக்க முடியும் . 3.5 லட்சம் வீடுகள் கட்டி இருக்க முடியும். 50 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி இருக்க முடியும். ஆனால் இதனையெல்லாம் செயல்படுத்த முடியாமல் போனதற்கு மத்திய அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காததே காரணம் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

44 minutes ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

1 hour ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

2 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

2 hours ago

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

3 hours ago

பரபரக்கும் அரசியல் களம்! அதிமுக – பாஜக கூட்டணி? அண்ணாமலை பதவிக்கு ஆபத்து?

சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…

3 hours ago