தமிழகத்தில் மணல் கொள்ளை.? I.A.S அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.! தமிழக அரசு வழக்கு.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், 1000 கிராம் அளவில் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இந்த சோதனையை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது.

ஆட்டோ ஓட்டுநரின் அசாத்திய தைரியம்.! சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம்.!

சேலம், செங்கல்பட்டு, புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

மணல் எடுக்கும் விவகாரம் என்பது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கீழ் வராது. அமலாக்கத்துறை தங்கள் வரம்பை மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

30 minutes ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

1 hour ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

5 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

6 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

7 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

8 hours ago