மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது… முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு… அரசிதழில் வெளியீடு..

Published by
Kaliraj

நடப்பு 2021 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும்  பணி தொடர்பாக தமிழக அரசு, தற்போது  அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல்  செப்டம்பர் மாதம்  30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தில் கணக்கெடுப்பு,  ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பு முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புபணி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கையை  கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.அதில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்களை தமிழக அரசு, அரசிதழில்  வெளியீட்டுள்ளது. இதை மத்திய அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் வௌியிட்ட அறிவிப்பையொட்டி, தமிழக அரசு தற்போது  இந்த அறிவிப்பை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

5 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

6 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

8 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

8 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

8 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

9 hours ago