#TnElection:வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும் முன்பே திருச்சியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!

Published by
Edison

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.

இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும்,அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்திலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றிப் பெற்றால் அதைக் கொண்டாடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருப்பினும்,திமுக கட்சியினர் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகக் கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும்,கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கே.என்.நேரு,திருச்சி மேற்குத் தொகுதியில் 92 ஆயிரத்து 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago