#TnElection:வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும் முன்பே திருச்சியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!

Default Image

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.

இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும்,அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்திலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றிப் பெற்றால் அதைக் கொண்டாடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருப்பினும்,திமுக கட்சியினர் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகக் கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும்,கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கே.என்.நேரு,திருச்சி மேற்குத் தொகுதியில் 92 ஆயிரத்து 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்