பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களிடம் உரையாற்றும் போது, மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் என்றும், மீதமுள்ள 25% தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு தடுப்பூசிக்காக செலவழிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் அவரதுட்விட்டர் பக்கத்தில், மாநிலங்களுக்கு இலவசமாக மத்திய அரசே நாட்டில் தயாரிக்கப்படும் 75 சதவீதம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
மேலும், தடுப்பூசியை குறித்து மத்திய அரசின் முந்தைய நிலையை மாற்றிக்கொண்டதற்கும் பிரதமருக்கு பாராட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று தடுப்பூசி பதிவு மற்றும் சான்று தரும் நடைமுறையையும் மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…