ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் மூலம் 920 கோடி நிதி கிடைத்துள்ளது. அதன் மூலம் தமிழக சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தரகுன்றிய இடங்களை கண்டறிந்து, அதனை மேம்படுத்த உள்ளோம். – பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
இன்று மாவட்டந்தோறும், பசுமை தமிழகம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்றது. அங்கு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘ தற்போது காலநிலை மாற்றம் கண்டுள்ளது. மழை சீராக இல்லாமல் இருக்கிறது. காலநிலை மாற்றம் கண்டுள்ளது. தற்போது காலநிலை கணிக்கமுடியாத சூழலாக மாறியுள்ளது.
சில நாடுகளில் தோல் எறியும் அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.
இயற்கை நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மண் வளம் கெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதன் காரணமாகதான் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் மூலம் 920 கோடி நிதி கிடைத்துள்ளது. அதன் மூலம் தமிழக சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தரகுன்றிய இடங்களை கண்டறிந்து, அதனை மேம்படுத்த உள்ளோம்.
2018இல் ஏற்பட்ட கஜா புயலின் பொது பிச்சாவரம் பகுதியில் இருந்த அலையாத்தி கடல் தான் மக்களை காப்பாற்றியது.
நாட்டு மரங்கள் மக்களுக்கு நல்ல பயன் தருகிறது. மேலும், தட்ப வெப்ப நிலை தங்கியிருக்கும் மரங்களையே வளர்க்க வேண்டும். மேலும், சந்தனம் ,செம்மரம், ஈட்டி மரம் உள்ளிட்ட வருவாய் தரும் மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவர். ‘ என தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…