நீட் தேர்வு முறைகேடுகள்… சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளில் நீட் தேர்வுக்கு எதிராக முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.

அதே, வேளையில், அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பையும் உருவாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், பல்வேறு தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு மைய கண்காணிப்பாளரே விடைத்தாள் நிரப்புவது உள்ளிட்ட புகார்கள் நீட் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதலில் இந்த குற்றசாட்டுகளை மறுத்த மத்திய அரசு, பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு மைய (NTA) தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.  பின்னர், நீதிமன்றம் தலையிட்டு இந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்கு எதிராக தனியாக தமிழ்நாடு குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது அது இந்தியாவின் குரலாக மாறியுள்ளது. மாநில அரசுகளே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர் என குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் வாசிக்கையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவுகளை கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும்செயலை மத்திய அரசு நிறுத்த வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துதர வேண்டும் என தீர்மானம் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் பின்னர் முதல்வர் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

4 minutes ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

36 minutes ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

1 hour ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

2 hours ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

2 hours ago

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…

3 hours ago