நீட் தேர்வு முறைகேடுகள்… சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளில் நீட் தேர்வுக்கு எதிராக முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.

அதே, வேளையில், அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பையும் உருவாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், பல்வேறு தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு மைய கண்காணிப்பாளரே விடைத்தாள் நிரப்புவது உள்ளிட்ட புகார்கள் நீட் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதலில் இந்த குற்றசாட்டுகளை மறுத்த மத்திய அரசு, பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு மைய (NTA) தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.  பின்னர், நீதிமன்றம் தலையிட்டு இந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்கு எதிராக தனியாக தமிழ்நாடு குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது அது இந்தியாவின் குரலாக மாறியுள்ளது. மாநில அரசுகளே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர் என குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் வாசிக்கையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவுகளை கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும்செயலை மத்திய அரசு நிறுத்த வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துதர வேண்டும் என தீர்மானம் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் பின்னர் முதல்வர் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…

1 hour ago

டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் ‘சர்தார் 2’ டீசர்.!

சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…

1 hour ago

பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…

3 hours ago

கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…

3 hours ago