இலங்கையில் கைது செய்யப்பட்ட 9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது.
அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். மேலும், அவர்கள் படகுகளையும் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் படகை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…