தமிழக முதல்வரால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல செய்ய முடியுமா?

Published by
Venu

முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா 15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா என  கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறுவது ஏற்புடையதல்ல என்றும், 18 வயது தொடங்கி 65 வயது வரை அயராமல் மக்களுக்காக உழைத்த மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்த ஒரு கூட்டம் ரஜினியை இதுபோல் இயக்குவதாக ஆ.ராசா விமர்சித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுகவோ அல்லது ஜெயலலிதாவோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், மாறாக காவிரி நடுவண் மன்றம் அமைத்தபோது ‘இது பல் இல்லாத ஆணையம்’ என்று கிண்டல் செய்தவர் ஜெயலலிதா என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

காவிரி நடுவண் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததிலிருந்து, இடைக்கால நிவாரணமாக 250 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத்தந்ததுவரை அனைத்தும் திமுகவினால் மட்டுமே நடந்தது என்றும் அவர் கூறினார். அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் திமுக எடுத்த நிலையில் அரசிதழில் அதை வெளியிட்டது மட்டுமே ஜெயலலிதா செய்த நடவடிக்கை என்றும் ஆ.ராசா கூறினார்.

15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா? என முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

பல தியாகங்கள் செய்த ஊழலற்ற தமிழக தலைவர்களின் படம் இடம்பெற்றிருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது முறையில்லை என்று கூறிய ஆ.ராசா, ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் ஜெயலலிதா சமாதியில் “சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் சமாதி” என்ற வாசகத்தை பொறிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago