குடியுரிமை திருத்தச் சட்டம்- இன்று ஆலோசனை கூட்டம்

Default Image

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்க கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில்,இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று  மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்