ராகுல் காந்தி தலைவராக வந்தால் பாஜகவுக்கும், காங்கிரஸிற்கும் நல்லது.! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.!
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்ப்பட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் நல்லது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது சரியான தலைமையை அமைக்காமல் இருந்து வருகிறது. பலரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் இன்னும் அந்த பொறுப்பை முழுதாக ஏற்றுக்கொள்ள வில்லை.
தற்போதைக்கு, காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தான் இருக்கிறார். ராகுல் காந்தியை தலைமை பொறுப்பு ஏற்க அதிக ஆதரவு இருந்தாலும், சிறுது உட்கட்சி பூசலும் நிலவி வருவதும் நிதர்சனமான உண்மை.
இதனை குறித்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதாவது, ‘ ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. பாஜகவுக்கும் நல்லது. ராகுல் காந்தி தலைவரானால் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் வென்றுவிடும். ‘ என கருத்து தெரிவித்துள்ளார்.