Justnow:பேரவையில் இன்று…இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி தீர்மானம்!

Default Image

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேதான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,அத்துறை சார்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இதனிடையே,இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய அனுமதி தரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.அதன்படி,உணவு,அத்தியாவசிய பொருட்கள்,மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி தரக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதனிடையே,இலங்கைக்கு ரூ.7,600 கோடி வழங்குவதாக நிதி உதவிகள் அறிவித்த மத்திய அரசு,அரிசி, டீசல் உள்ளிட்ட பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.எனினும்,மத்திய அரசு வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்பதால் இலங்கை மீண்டும் கடனுதவி கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில்,இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan