உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த இந்த வழக்குகள் நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி எம்.வி.முரளீதரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆசிரியர்களின் ஊதியத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட குழு, ஆசிரியர்களுக்கான சேமநல நிதி பங்களிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஆகும் செலவு உள்ளிட்ட செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. கல்வித் தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம் போல ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது என்றும், குறைந்தபட்ச ஆசிரியர்கள் குறித்து தெரிவித்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
எனவே, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்ய, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். மேலும், அப்பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். இதுசம்பந்தமாக பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை மீண்டும் கட்டண நிர்ணயக் குழுவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், இல்லத்தரசிகள்…
சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்…
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று…
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர்…
கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை…
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று…