திருவாரூர் இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும்…!  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Default Image

திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி:

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :

பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

Image result for அதிமுக

இந்நிலையில் திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.நாளை காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் அதிமுக தலைமை செயலகத்தில்  வேட்பாளர் பெயர்  அறிவிக்கப்படும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்