திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைத்து மக்கள் வெளியில் நடமாட தடைவிதித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல்துறையினர் ட்ரான் கேமிரா மூலம் பொதுமக்கள் வெளியில் நடமாடினார்களா என பார்த்து வந்துள்ளனர். அப்போது, பொட்டல் காட்டில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்துள்ளனர். அப்போது, ட்ரோன் கேமிராவை பார்த்ததும், இளைஞராகள் பதறி அடித்து ஓடுகின்றனர். அதில் கேரம் போர்டை தூக்கி கொண்டு ஒரு இளைஞர் ஓடுகிறார். அவரை ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவே, அவர் அந்த கேரம்போர்டை தூக்கி வீசிவிட்டு ஓடுகிறார்.
இந்த விடியோவை திருப்பூர் போலீசார் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு வெளியில் தேவையில்லாமல் சுற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விடியோவை வெளியிட்டதாக குறிப்பிட்டனர்.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…