அண்மையில் திருநெல்வேலியை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் அவரது சமூகத்தை சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியை காதலித்து, பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் காதல் திருமண ஜோடி திருநெல்வேலி டவுனில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், வான்மதி சகோதரர் சமாதானம் பேச அழைத்து வர சொன்னதாக முத்துபாண்டியன் என்பவர் நம்பிராஜனை அழைத்து சென்றார்.
இதனை அடுத்து அங்கு முத்துபாண்டியனுடன் நம்பிராஜன் சென்றார். அந்த இடத்தில வான்மதி சகோதரர் செல்லசாமி, செல்லத்துரை, முருகன், ஆகியோர் ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். இதனை கண்ட நம்பிராஜன் தப்பி ஓட முயற்சித்த போது, நம்பிராஜனை அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றது. பின்னர் அந்த உடலை ரயில் தண்டவாளத்தில் கொண்டு போட்டுவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய செல்லசாமி, செல்லத்துரை, முருகன், முத்துபாண்டியன் ஆகியோரை போலீசார் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர். இவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதில் வான்மதி சகோதரர் செல்லசாமி கூறிய அறிக்கையில், ‘ எனது தங்கை வான்மதியை காதலிப்பதாக நம்பிராஜன் சுற்றி வந்தான். அவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கின்றன. இதனை சுட்டிகாட்டடி, எனது தங்கையிடமும் கூறினேன். ஆனால், நம்பிராஜன், ‘நான் உன் தங்கையை தூக்கிகொண்டு தாலி காட்டுவேன்’ என சவால் விடுத்தான். அப்படி செய்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என நான் கூறினேன். சொன்னபடி என் தங்கையை திருமணம் செய்துகொண்டான்.அதனால் நான் கொலை செய்துவிட்டேன்.’ என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…