திருநெல்வேலி : மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பெண்ணுடைய வீட்டார் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகள் அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கலப்பு திருமணம் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுடைய திருமணத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மகள் உதய தாட்சாயினியை காணவில்லை என அவர்களுடைய வீட்டார் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்த நிலையில், மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருக்கும் தகவல் தெரிய வந்து இருக்கிறது. உடனடியாக ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு சென்று பெண்ணை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளனர். ஆனால், பெண்ணிற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் வரவும் மறுத்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபாட்டார்கள். வாக்கு வாதத்தின் போது கட்சி அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்தனர். அத்துடன் கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும், திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேர் கைதாகி இருக்கும் நிலையில். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யார் யாரெல்லாம் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவதிற்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…