சாதி மறுப்பு திருமணம் : கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார்!

Published by
பால முருகன்

திருநெல்வேலி : மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பெண்ணுடைய வீட்டார் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகள் அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கலப்பு திருமணம் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இவர்களுடைய திருமணத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மகள் உதய தாட்சாயினியை காணவில்லை என அவர்களுடைய வீட்டார் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்த நிலையில், மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருக்கும் தகவல் தெரிய வந்து இருக்கிறது. உடனடியாக ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு சென்று பெண்ணை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளனர். ஆனால், பெண்ணிற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் வரவும் மறுத்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபாட்டார்கள். வாக்கு வாதத்தின் போது கட்சி அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்தனர். அத்துடன்  கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும், திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேர் கைதாகி இருக்கும் நிலையில். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யார் யாரெல்லாம் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவதிற்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

3 hours ago
நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

4 hours ago
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

4 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

5 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

5 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

6 hours ago