தொடர்ந்து இரண்டரை வருடம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததே மிகப்பெரிய சாதனைதான்-திருநாவுக்கரசர்

Default Image

தொடர்ந்து இரண்டரை வருடம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததே மிகப்பெரிய சாதனைதான் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில், என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன், ராகுல் காந்தி கூறும் வழியில் நடப்பேன். தமிழக காங்கிரஸ்  தலைவராக இருந்த போது கட்சிக்காக உழைத்ததை விட, தற்போது இன்னும் அதிகம் உழைப்பேன்.

ராகுல் காந்தி தான் என்னை தலைவராக நியமித்தவர் எனவே மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாழ்த்துக்கள்.அமெரிக்காவில் ரஜினியை சந்திக்கவில்லை.எந்த பதவியும் இல்லாமல் சாதாரண தொண்டனாக இருந்து கூட நான் பணியாற்றுவேன்  என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்