திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
எனவே இதனை தவிர்க்கும் வகையில், இனி வரும் காலங்களில் திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி வரப்பெறும் அறிக்கைகளில் இத்துடன் இணைத்தனுப்பப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்து இணை ஆணையரால் சான்றொப்பம் இடப்பட்டு சரிபார்ப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய ஆவண நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…