மின்கட்டணத்தை செலுத்த காலஅவகாசம்.. மின்வாரியம் அதிரடி!

Default Image

மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பதாக மின் வாரியம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை தொடர்ந்து, தற்பொழுது மதுரை மற்றும் தேனியில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக, அம்மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தத்தை நீடிப்பதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்