புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது – அமைச்சர் ஐ.பெரியசாமி

Default Image

புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று அண்ணாமலை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம். 

நேற்று திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சுயலாபத்திற்காக  தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி வருகிறார்.  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார். புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை முதலில் தன்னுடைய முதுகைப் பார்க்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மதம் மற்றும் சாதி ரீதியாக தமிழக மக்களிடையே யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்