துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விளைவாக அறிவித்து, அவரது புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 28-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறியுள்ளார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீதான அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக கட்சியே துரோக கும்பல். அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்