தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!

Default Image

தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சேலம் நாமக்கல் தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தேனி திண்டுக்கல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேன்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. தென்மேற்கு மழை தொடரும் மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலில் பகுதியில் 50 மீட்டர் காற்று வீசவுள்ளதால் ஜூன் 10 மற்றும் 11ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்