அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!

Default Image

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ,திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கன மழை தொடங்கியது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

rain

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்