பொள்ளாச்சியில் பரபரப்பு .!குடும்ப தகராறில் மாமியாரை தலையில் கடித்த மருமகள்.!

Published by
murugan
  • மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை , மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியை மிரட்டி உள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). சரவணகுமாருக்கு  கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார்.

இந்நிலையில் கல்பனா  தாய் வீட்டில்கணவருடன் குடியேறி உள்ளார்.அடிக்கடி சரவணகுமார் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்  மனைவிக்கு இடையே  அடிக்கடி சண்டை ஏற்படும்.அப்போது சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார். பின்னர் கணவரை அழைக்க கல்பனா வரும்போது  நாகேஸ்வரி உடன்  அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை  கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் நாகேஸ்வரி  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நாகேஸ்வரி சாலையில் நின்று கொண்டிருந்தபோது கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் தலையைப் பிடித்து தலையில் கடித்துள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த நாகேஸ்வரி மருத்துவமனைக்கு சென்று ஆறு தையல் போட்டு உள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் கல்பனாவை கைது செய்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

3 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

4 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

5 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

6 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

6 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

7 hours ago