சென்னை: மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.சில இடங்களில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது.இதனால்,பல இடங்களில் சாலைகளிலும்,வீடுகளிலும் மழைநீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,முதல்வர் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தேவையான அதிக நவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.அதன்படி,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மணலி,தாம்பரம்,பெரும்புலிபாக்கதிற்கு தலா ஒரு குழு என பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் ஏற்கனவே புறப்பட்ட நிலையில் மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…