பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது!

Default Image

பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது மாக்கினாம்பட்டி அருகே ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டது இதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சோதனை செய்தார்.

Image result for தண்டவாளத்தில் கல்

அப்போது தண்டவாளத்தில் கல் இருப்பதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கே இருந்து ரயில் புறப்பட்டது.இது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையிலான போலீசார் மோப்பநாய்களுடன் ரகசியமாக முகாமிட்டனர்.

அப்போது தண்டவாளத்தில் சந்தேகதுத்துக்கிடமாக சுற்றி இருந்த மூன்று பீகார் மாநிலத்தை போலீசார் கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் குடிபோதையில் கல் வைத்ததாக தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் மூன்று பேர் மேல் வழக்கு பதிவு செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்