கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு இரவு அவரது பொலிரோ காரில் சென்னைக்கு கவரிங் வாங்க சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 10 கிலோ கவரிங் நகையை வாங்கி அவரது பொலிரோ காரில், கோவைக்கு திரும்பி வந்துள்ளார். அவருடன், நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த மேலாளர் 41 வயதான வரதராஜ், மற்றும் கோவை, மதுக்கரையைச் சேர்ந்த 36 வயதுடைய ஓட்டுனர் ரமேஷ் ஆகியோர் பாலசுப்ரமணியனுடன் சென்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு ஆத்துார் புறவழிச்சாலையில் வந்தபோது, சேலத்திலிருந்து, சென்னை நோக்கிச்சென்ற எஸ்.டி கூரியர் மினி லாரி, கார் மீது மோதியது. அதில், இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது விழுந்தது. இந்த விபத்தில், மூன்று பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மோதிய மினி லாரி ஓட்டுனரான திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த 22 வயதான வரதராஜ் என்பவரை ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…