கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமில்லாமல்,பிற நோயால் பாதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்