மூவர் கொலை வழக்கு – 10 நாள் கைதான மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவலர்கள் மனு!

Published by
Rebekal

மூவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காவலர்கள் மனு அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள சவுகார்பேட்டை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், புஷ்பா மற்றும் ஷீத்தல் ஆகிய 3 பேரை கடந்த புதன்கிழமை மர்ம கும்பல் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலில்சந்தின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலையாளி பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசர் கண்டுபிடித்துள்ளனர்.

குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இந்த கொலை சம்பவம் அரங்கேற காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். தற்பொழுது போலீசார் புனேவில் பதுங்கியிருந்த கைலாஷ், விஜய் உத்தம் ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago