தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும், வடகிழக்குப் பருவ மழையும் கருத்தில்கொண்டு,தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு,உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…